சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வழியாகவும், கத்திபாரா முதல் சின்னமலை வழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 11 (இன்று ) மற்றும் 12 வெள்ளி, சனி காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக அக்டோபர் 11 இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து சென்னைக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் ஓ சந்திப்பில் இருந்து வழி மாற்றப்பட்டு மதுரவாயல் பைபாஸ் வழியாக நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். அதேபோல தென் சென்னை பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக அதே மதுரவாயல் பைபாஸிற்கு திருப்பி திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் எல்லா வாகனங்களையும் 100 அடி சாலைக்கு திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் அக்டோபர் 12 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 2 மணி வரையும், ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பின் மூலம் பெரும்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். ஈசிஆர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி கிடையாது. என சென்னை போக்குவரத்து சார்பாக ஆறிவிக்கப்பட்டுள்ளதாம்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…