திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம் எனும் பகுதியில் செல்வன் என்பவரின் குடும்பத்தாருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு என்பவருக்குமான நிலத்தகராறில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வன் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். இதனால் செல்வனின் குடும்பத்தார் நியாயம் கேட்டு கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்வத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அவர்களோடு கூட இணைந்து போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நள்ளிரவில் அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா அவர்களின் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக ஜின்னா, செல்வநாயகம் ஆகிய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…