டாஸ்மாக் இல்லாததால் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

Published by
Rebekal

நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பல மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சும் முயற்சிகளிலும் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர்.

நெல்லையில் உள்ள உள்ள சி.என் கிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும், சாராய நாற்றம் வருவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டியதும், போலீசார் வெளியில் இருப்பதை கண்ட வீட்டுக்குள் இருந்த இருவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் பிடிபட்ட நபர்களிடமும் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் உடையான் மற்றும் சூரியமூர்த்தி என்பது கண்டறியப்பட்டது.

பின் அவர்கள் வீட்டை சோதனை செய்து கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டிருந்த தெரிய வந்ததுடன், அதற்காக போடப்பட்டிருந்த ஊர்களில் இருந்து வெளியே வந்த நாற்றம் காரணமாகத்தான் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு தெரிய வந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன் உடையார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். சாராயம் குடிக்காமல் இருந்ததால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் தான் கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவ்விரவரும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

9 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

10 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

11 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

12 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

13 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

14 hours ago