TVK Leader Vijay [File Image]
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்.
தற்போது அதே போல மீண்டும் இந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கும் விழாவை விஜய் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவானது இம்முறை விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தவெக கட்சி தலைவராக நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்க உள்ளார்.
இந்த விழா இம்முறை இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக விழா நடைபெற உள்ளது. இன்று 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கப்பட உள்ளது. இந்த விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விழா காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், விழா நடைபெறும் இடத்திற்கு அதிகாலையிலேயே தவெக தலைவர் விஜய் வந்துவிட்டார். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விழாவை விரைவாக ஆரம்பித்து நிறைவு செய்யவும் விஜய் சீக்கிரமாக வந்துள்ளார் என கூறப்படுகிறது.
விழா ஆரம்பித்த உடன் 10 நிமிடங்கள் விஜய் மாணவர்கள் மத்தியில் பேச உள்ளார். விழாவில் கலந்துகொள்ளும் நபர்கள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்கள் குடும்பத்தினரை மட்டுமே உடன் அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…