திமுகவின் கோரிக்கைகளை பிரதிபலித்தாரா தவெக தலைவர் விஜய்.? நீட் விலக்கு., மாநில உரிமை…

Published by
மணிகண்டன்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தவெக தலைவர் விஜய் இன்றைய விழாவில் குறிப்பிட்டார்.

இன்று தமிழக அரசியலில் முக்கிய செய்தியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியதாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்த தீர்மனத்திற்கு தனது முழு ஆதரவு என தெரிவித்ததும் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளன.

கல்வி விருது விழா :

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கும் விழா முன்னதாக 21 மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி நடைபெற்றது. அதனை அடுத்து 2ஆம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

விஜய் பேசியது என்ன.?

சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். நீட் மாநில உரிமைக்கு எதிரானது என்றும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றார் வகையில் கல்வி திட்டம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தீர்மானத்திற்கு முழு ஆதரவு :

மேலும், மாநில மொழியில் படித்துவிட்டு மத்திய அரசு பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும்.? என்றும் கேள்வி எழுப்பினார்.  சமீபத்திய நீட் குளறுபடியால் நீட் மீதான நம்பகத்தன்மை மக்களுக்கு முற்றிலும் அழிந்துவிட்டது. நீட் விலக்கு என்பதே இதன் ஒரே தீர்வு என்று குறிப்பிட்ட விஜய், அடுத்ததாக, நீட் விலக்கு குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு முழு ஆதரவு என வெளிப்படையாக ஆளும் திமுக அரசின் நீட் விலக்கு நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

மாநில உரிமை :

மேலும், சிறப்பு பொதுப்பட்டியல் உருவாக்கி கல்வி, சுகாதாரம் மட்டும் அதில் சேர்க்க வேண்டும். அனைத்து துறைகளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்று மாநில உரிமை பற்றியும் பேசினார். இவை என்னுடைய கோரிக்கை மட்டுமே என்றும் இது உடனடியாக நடக்காது நடக்கவும் விட மாட்டார்கள் என்றும் தனது அரசியல் பேச்சில் விஜய் குறிப்பிட்டார்.

திமுகவின் நிலைப்பாடு :

ஆளும் திமுக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் நீட் தேர்வு குளறுபடிகள் குறித்தும் , நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 3) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்,மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும், கல்வி பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி அதனை மாநில பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்படியான சூழலில் இதே கருத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேடையில் பேசியிருப்பது நீட் விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

52 mins ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

21 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 day ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

1 day ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

1 day ago