தவெக முதல் மாநாடு : டோல் கட்டணம் கிடையாது! குஷியில் தொண்டர்கள்!

உளுந்தூர்பேட்டை - விக்கிரவாண்டி இடையே தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikravandi Toll Plaza

விக்கிரவாண்டி : வி.சாலையில் நடைபெறும் தவெக முதல் மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? அவரது கட்சியின் கொள்கைகள் என்னென்ன? என்று எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருந்து வருகிறது.

மேலும், இந்த மாநாடு வி.சாலையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது முதல் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி பக்கா பிளானுடன் நிறைவு பெற்றும் இருக்கிறது. அதில், ஒன்றாக தற்போது தொண்டர்களுக்குக் குஷியான ஒரு செய்தியும் வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், இந்த மாநாட்டிற்குப் பல மாவட்டத்திலிருந்து மக்கள் வேன், கார், லாரி, பேருந்துகள் என மாநாட்டிற்கு வருகை தருகின்றனர். அதனால், உளுந்தூர்பேட்டை – விக்கிரவாண்டி டோல்கேட்டில் தவெக கட்சிக் கொடியுடன் வரும் வாகனத்திற்கு கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

அதாவது மாநாட்டிற்கு வரும் கூட்டம் காரணமாக எந்த வித போக்குவரத்து நெரிசலும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டோல்கேட் நிர்வாகத்திடம் நேரடியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தவெக தொடர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகின்றனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்