சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி செய்தியாளர்.!

Published by
Ragi

சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள புதுநல்லுரை சேர்ந்தவர் மோசஸ் .இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார் . இவரை ஒரு சில கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இவரது வீட்டின் முன்பு வந்த மூன்று பேர் தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளனர் . அதனையடுத்து அந்த மூன்று பேரும் பேச்சை கொடுத்தவாறே மோசஸ் அவர்களை தூரமாக அழைத்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர் .

மோசஸ் அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்துள்ளார் . உடனடியாக வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் . தலை மற்றும் கைகளுடன் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மோசஸ் அவர்களை உடனடியாக அருகிலுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர் . ஆனால் மோசஸ் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்த அவரது தந்தை , அதே பகுதியில் உள்ள ரவுடி நவமணி தான் தனது மகன் மோசஸின் கொலைக்கு காரணம் என்று சந்தேகமாக இருப்பதாகவும் , ஏனெனில் மோசஸ் அவர்கள் புதுநல்லூர் பகுதியில் நடந்து வந்த குற்றங்களை சுட்டி காட்டி அதனை செய்தியாக்கி அம்பலப்படுத்தினார் . அதனால் கோபமடைந்த நவமணி தனது மகனை கொலை செய்வதாக மிரட்டி வந்ததாக மோசஸின் தந்தை புகாரில் கூறியுள்ளார் . தற்போது மோசஸ் அவர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago