தமிழகத்தில் முதன்முறையாக, தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடியில், ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு முன்பதாகவும் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த இயந்திரத்தில் ரூ.5 செலுத்தி, முக கவசத்தை பெற்று செல்கின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம், ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட முக கவசங்களை மக்கள் பெற்று செல்வதாக கூறுகின்றனர்.
இதே முக கவசத்தை நாம் வெளியில் உள்ள மருந்து கடைகளில் வாங்கினால், ரூ.10-20 வரை விற்பனை செய்யப்படுகிற நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுள்ள இந்த முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…