தமிழகத்தில் டெங்கு பாதிப்பு.. தூத்துக்குடியில் 30%  காலி பணியிடங்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.!

Published by
மணிகண்டன்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தூத்துக்குடியில் மருத்துவ ஆய்வுகளை செய்து வருகிறார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் தற்போது உள்ள டெங்கு காய்ச்சல் நிலவரம், அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தின் போது, டெங்கு காய்ச்சல் என்பது பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உருவாவதற்கு முக்கிய காரணம் ஏடிஎஸ் கொசு ஆகும். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டெங்கு பாதிப்பானது கடந்த 2012இல் 13000 பேர் டெங்குவால் பாதிப்படைந்தனர். அப்போது 26 உயிரிழப்புகள் நேர்ந்தன. அதே போல,  2017 காலகட்டத்தில் 23000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அதில் 65 பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் இந்த டெங்கு பாதிப்பானது 6000, 7000 என உள்ளது.

ஆனால் , கடந்த ஆண்டும் சரி, இந்தாண்டும் சரி டெங்கு பாதிப்பு என தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.  இதுவரை 4,454 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர். அதில் தற்போது 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 உயிரிழப்புகள் டெங்குவால் ஏற்பட்டுள்ளது என தமிழகத்தில் டெங்கு நிலவரம் பற்றி அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அடுத்து மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது பற்றி பேசுகையில்,  தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்கள், 983 மருந்தாக ஊழியர், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் கொரோனா காலத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு கூடுதல் 5 மதிப்பெண் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, சிறப்பு மதிப்பெண் கொடுக்க கூடாது என சில மருத்துவர்கள் நீதிமன்றத்தை முறையிட்டார்கள் அவர்களுக்கு சாதகமாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டதால், தற்போது மருத்துவ பணிகளுக்கு ஆட்களை நிரப்புவதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்.

நேற்று, 10205 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகக்கான ஆணைகளை வழங்கினார். அதில் 571 பேர் சுகாதாரதுறையினை சேர்ந்தவர்கள். அதே போல மீண்டும் சுகாதாரத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் 30 சதவீத காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்ற தீர்ப்பு விவகாரம் சரி செய்யப்பட்டதும் உடனடியாக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

4 hours ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

4 hours ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

6 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

6 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

7 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

8 hours ago