அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது… டிடிவி தினகரன் பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்து போட்டியிடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமமுக கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. முதலில் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதன்பின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாத காரணத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை.

இதனால் வரும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  இது உறுதியான பிறகு அறிவித்தால் தான் நாகரிகமாக இருக்கும். அதன்படி, எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்துப் போட்டியிடும். ஆனால், ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது.

எம்ஜிஆர் பற்றி அவதூறு.! ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!

இதனை எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பமாட்டார்கள். ஆதலால் இபிஎஸ்வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் அமமுக உறுதியாக வெற்றியை பதிவு செய்யும். தேர்தல் வெற்றி தோல்வியலாம் தாண்டி அரசியல் ரீதியாக நானும், ஓபிஎஸ்-யும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். பொறுத்திருந்து பாருங்கள், வரும் காலத்தில் இந்த எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும், இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பெரிதாக சாதிக்காது. இதனால் எங்கள் கூட்டணி உறுதியான பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், ஆளுநர் அந்த பதவிக்கு எந்த களங்கமும் வராமல் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் ஆளுநருக்கு நல்லது, அதை அவர் பின்பற்றுவார் என நம்புகிறேன் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago