வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கமல்ஹாசன் புகார்.
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே மர்மமான முறையில் wi-fi வசதி ஏற்படுத்தப்படுகிறது என்றும் லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது எனவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென கண்டெய்னர் லாரியில் வருகின்றன. இதனால் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது என தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அளித்த புகார் மனுவை அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…