திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது…!!!
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, பல இடங்களின் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், இப்போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 காளையர்கள் களமிறங்கவுள்ளனர். காளையர்கள் மிக உற்சாகமாக காளைகளை அடக்குவதில் கவனம் செலுத்து வருகின்றனர்.