திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை..! 10 மாதத்திற்கு பிறகு 1.75 கிலோ நகைகள் மீட்பு..!

Default Image

திருச்சி சத்திரம் பேருந்து அருகே கடந்த 2-ம் தேதி வரை உள்ள லலிதா ஜுவல்லரியில்  தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் , சுரேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த கணேசன் ஆகிய கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் , சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்சி போலீசார் நீதிமன்றம் உத்தரவு பெற்று சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் முருகனிடம் பெங்களூர் போலீசாரும், மதுரை கணேஷிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 19 லட்சம் மதிப்புள்ள 470 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவத்தில் முருகன் , சுரேஷ் உள்ளிட்டோருக்கு  தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கணேசன், கொடுத்த தகவல் பெயரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 19 லட்சம் மதிப்புள்ள 3.75 கிலோ நகைகளில் இருந்து 1.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்