திருச்சி சாத்திரம் பகுதியில் உள்ள லலிதா ஜிவல்லரியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில் பல கோடிகள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் இருப்பது கலவல்துறையினருக்கு தெரியவந்தது.
பின்னர், அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்ததால், மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவரது மண்டை பகுதி உடைந்து, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மீதம் உள்ள 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாம்.
கொள்ளையர்கள் தங்கியிருந்த அறையில் நிறைய காலி பைகள் இருந்துள்ளன. அதில் பொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. கேஸ் வெல்டிங் வாங்கியதற்கான ரசீதும் கிடைக்க பெற்றது. மேலும் விசாரணையில் அடுத்ததாக பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பலகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறதாம்.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…