திருச்சியில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் மகள், கங்காதேவி. 14 வயதாகும் அந்த சிறுமி, நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறினார். அதுமட்டுமின்றி, சிறுமி எரிந்து கிடந்த இடத்தை காட்டிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.
இந்நிலையில், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்கியது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும், 6-வது முறையாக தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்குவதாகவும் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…