சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம்.

பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக திருச்சி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு இருந்தார். திருச்சியில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அவருக்கு நேற்று , ஒருநாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பித்தார்.

இன்றுடன் ஒருநாள் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திருச்சி நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.  இதனை அடுத்து, தற்போது திருச்சியில் இருந்து அவர் ஏற்கனவே இருந்த கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் தற்போது கொண்டு செல்லப்படுகிறார்.

இதே வழக்கில் கைதாகியுள்ள பெலிக்ஸிற்கு இன்று காலை கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

11 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

11 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

12 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

12 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

14 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

15 hours ago