திருச்சி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Default Image

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் இருசக்கரவாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தமது டிவிட்டர் பதிவில் திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மனித நேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்