இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து, சிகிக்சை பார்த்த மருத்துவருக்கு நோட்டிஸ்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் ஒரு நாற்காலி வைத்து அதில் நோயாளியை அமர வைத்து தூரத்தில் இருந்தபடி மருத்துவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து, மருத்துவர் தான் உட்கார்ந்த இடத்திலிருந்து “டார்ச்” அடித்துப் பார்த்து அவருக்கு சிகிச்சையை அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து, அம்மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குநர் செந்தில்குமாரைக் கேட்டபோது, இருவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…