2 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ..

Published by
murugan

போக்குவரத்து தொழிலாளருக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்  , கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கவும் ,25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மேலும்  14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் நேற்று  தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதையெடுத்து நேற்று போக்குவரத்து துறை 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவர்த்தையில் எந்தத்தந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்பார்கள் மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் நேரடியாக கலந்துகொள்ளவரா.. ?என்பது குறித்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்கவில்லை, இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்கவேண்டும்.

இந்த பேச்சுவார்த்தையில் எந்தந்த தொழில் சங்கங்கள் கலந்துகொள்வார்கள் ,அதேபோன்று எவ்வளவு காலகட்டத்திற்குள் பேச்சுவார்த்தை முடிப்பார்கள் என்பதை பற்றி அவர்கள் கூறவில்லை என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

போக்குவரத்துத்துறை செயலாளர் பிரதாப் யாதவ்விடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பில் பேசினார்கள்.அந்த சந்திப்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை உரிய பரிசீலனை  செய்வதாகவும்  20-ம் தேதிக்குள் முறையான பதில் கொடுக்கப்படும் என பிரதாப் யாதவ் உறுதியளித்தார்.

இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டபோக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை  வாபஸ் பெறுவதாக கூறினார்கள்.

Published by
murugan

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

11 minutes ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

1 hour ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

2 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

2 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

3 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

3 hours ago