சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

Default Image

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ஜுன் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்  பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதனையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருடன் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை  நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் என்று  தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.ஊதியம் வழங்கப்படும் என்கிற உறுதிமொழியை ஏற்று வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army