தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி – முதல்வர் அறிவிப்பு.!

Default Image

தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார். 

இதையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழகம் தான் மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனிடையே ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்