தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை பாரதி கண்ணம்மா.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் திருநங்கைகளும், மாற்றுப்பாலினச் சிறுபான்மையினரும் போட்டியிடலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சென்னையில் ஒரு திருநங்கை போட்டியிட்டார்.
இதனிடையே, மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த நிலைமையை உருவாக்கி நீதியைப் பெற்றுத்தந்தவர்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவை தெற்கில், பாஜக வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் ஆகிய வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…