திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் வாசிக்க கூடிய சம்யுக்தா எனும் திருநங்கை காவலருக்கு படித்து முடித்துவிட்டு முன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் திருநங்கை காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த திருநங்கை காவலர் டிஐஜியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததைத் தொடர்ந்து கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் திருநங்கையிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநங்கை நேற்று காலை விஷம் குடித்துள்ளார். இந்நிலையில் இதற்கு காரணமான கல்லூரி முதல்வர் முத்துக்கருப்பன் மற்றும் துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து திருநங்கை கூறுகையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட இவர்களின் பாலியல் தொந்தரவு தான் காரணம் எனவும், வேறு எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை எனவும் கூறியுள்ளார். தற்போது திருநங்கை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…