திருநங்கை ஸ்மிதா தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார்.
இன்று பெற்றோர்கள் செய்த பாவத்திற்காக பிள்ளைகள் பலனை அனுபவிப்பது போல, பல இடங்களில் தவறான பெற்றோர்களாலும் சில இடங்களில் தங்களது சூழ்நிலை நிமித்தமாகவும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் அதிகமானோர் உள்ளனர்.
இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்கு அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மனம் வருவதுண்டு. அந்த வகையில், சென்னையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை ஸ்மிதா, அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளை தாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அந்த திருநங்கை தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக அமைத்துள்ளார். ஓவியக்கலை அவருக்கு கைவந்த கலை போல மிகவும் அழகாக வரையும் திறமை கொண்ட அவர், தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியாக அமைந்தது மட்டுமல்லாமல், அதனை இணையதளம் மூலம் விற்பனையும் செய்கிறார்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார். திருநங்கை ஸ்மிதா ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தனது திருநங்கை சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளுக்கும் தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். இவரது செயலுக்கு அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…