தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்ட திருநங்கை கண்ணம்மா…!

Default Image

திருநங்கை பாரதி கண்ணம்மா, தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்.6ம்  தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இவர் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இவருக்கு கடந்த தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தேர்தலிலும் தனக்கு பானை சின்னம் ஒதுக்கப்படும் என்ற  நம்பிக்கையில், தலையில் பானையுடன் வீதி வீதியாக பரப்புரை மேற்கொள்கிறார்.

அப்போது, திருநங்கை வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும், அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith