தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வைக்கும் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அயல் பணியில் இருந்து திரும்பிய டிஐஜி சரவணன் சுந்தர், திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐஜியானார் மகேந்திர குமார் ரத்தோட்.
காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்பியாக ஐபிஸ் அதிகாரி நிஷா, திருச்சி மாநகர ஆணையர் அருண் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக ராதிகா, சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக மாடசாமி உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…