11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு 11 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, தேனி , பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன்,விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் ஆட்சியராக பழனி ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவானா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோரையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை ஆட்சியர் சமீரன், சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன், நெல்லை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…
சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய…