பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது …! தென்னக ரயில்வே அறிவிப்பு

Default Image

பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று  தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக  தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .

செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் வரும் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விருதுநகர் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.  மதுரை – பழனி பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரை – கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து  செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் வரும் 3-ம் தேதி ராமேஸ்வரம் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து  செய்யப்படுகிறது.  கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதி வாரியாக ரத்து  செய்யப்படுகிறது. திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து  செய்யப்படுகிறது என்று  தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்