ரத்து செய்யப்பட்ட ராக்போர்ட் உள்ளிட்ட ரயில்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Default Image

பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட ராக்போர்ட், உழவன் உள்ளிட்ட ரயில்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் பயணிகளின் எண்ணிக்கை  குறைந்தததால் பல சிறப்பு ரயில்கள் மே மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்கள்  இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில்நிலையங்களுக்கு இரயில் இயக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்