செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் ரயில் போக்குவரத்து குறைவு என்பதல் ரயில் சேவை பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படும்.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…