உதகையில் சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

Published by
Rebekal

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதகை அருகே உள்ள புதுமந்து எனும் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய சந்திரனின் மனைவி கீதா. இவர்களுக்கு 16 வயதில் ரக்ஷிதா என்ற மகளும், 11 வயதில் விஷ்வா என்னும் மகனும் உள்ளனர். இந்நிலையில் சந்திரன் கீதா இருவரும் ஒப்பந்த முறையில் காய்கறி தோட்டத்தை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரன் மற்றும் கீதா ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்களது பிள்ளைகள் இருவரும் தரையில் உயிரிழந்த நிலையில் சடலமாகவும் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் புதுமந்து காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago