செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் செல்பவர்களாக இருந்தாலும், வருபவர்களாக இருந்தாலும் சரி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சுங்கச்சாவடியில் வழக்கமாக திங்கள்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறைக்கு பின் வரும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகி டோல்கேட்டை கடக்க பல நேரங்கள் எடுக்கும் .
கடைசியாக கொரோனா தொற்று காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க பல சென்னைவாசிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இந்த சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் சென்னைக்கு வரும் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி மக்கள் விநாயகர் சதுர்த்தி, ஞாயிறு விடுமுறை என சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வந்ததால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுபோன்று போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் கூடுதல் கவுண்டர்களை திறந்து வாகனங்களை விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…