திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

திருக்கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என அறிவிப்பு.

திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் நம்முடைய பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ளார் அறிவிப்பில், தமிழகத்திலுள்ள திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பனவாகவும், பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சிற்பங்கள், கற்றளிகள் நம் கட்டிட கலைக்கு பெரும் எடுத்துக்காட்டுகளாகவும், நமது பண்டைய நாகரீகத்தின் சின்னங்களாகவும், உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமும் அமையப் பெற்றுள்ளன.

அவற்றை போற்றி பாதுகாப்பது இத்துறையின் தலையாய கடமையாகும். அதேபோன்று முற்காலம் தொட்டு திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள், போன்றவற்றையும் அவற்றின் பாரம்பரியத்தினை போற்றும் வண்ணம் நடத்துவதும் இத்துறையின் முக்கிய கடமையாகும்.

இதனால் துறைக்கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், வருஷாபிசேகங்கள், கொடை விழாக்கள் போன்றவற்றிற்காக ஏற்பாடு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளில் மேற்படி விழாக்களின் சிறப்பம்சங்கள் பண்டைய நாகரீகத்தின் பெருமைகள், வழிபாட்டு முறைகளின் தத்துவங்கள், திருக்கோயில்களின் தலவரலாறுகள் போன்றவற்றை தற்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நடத்த வேண்டும்.

மேலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டுகளித்து இன்புற்று மகிழும் வண்ணமும் நமது பாரம்பரிய கலை, கலாச்சார, ஆன்மீக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பெற வேண்டும் என்றும் என்றும் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்த வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

28 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

30 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago