8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்க கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், மசாஜ் செய்யவும், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே ஒகேனக்கல் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்ததும் தங்களது விடுமுறையை பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…