8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்க கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், மசாஜ் செய்யவும், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே ஒகேனக்கல் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்ததும் தங்களது விடுமுறையை பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)