தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 6 மாவட்டங்கள்.!

Default Image

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள முதல் 6 மாவட்டங்களில், சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 395 ஆக உள்ளது. திருவள்ளூரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அங்கு 337 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் 299, அரியலூர் 275, செங்கல்பட்டு 267 போன்ற மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்