Half Yearly Examinations [File Image]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று திறக்கப்பட்டது.
அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுகள் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரையாண்டு விடுமுறை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை( ஜனவரி 1) வழங்கப்பட்டது.
2024-ல் மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்கவுள்ளனர்- செல்லூர் ராஜூ
ஆனால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட அந்த அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தும் இருந்தது.
இதனையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திளும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (ஜன.3ம் தேதி) முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…