தூத்துக்குடி மாணவர்களே நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Half Yearly Examinations

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று திறக்கப்பட்டது.

அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுகள் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரையாண்டு விடுமுறை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை( ஜனவரி 1) வழங்கப்பட்டது.

2024-ல் மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்கவுள்ளனர்- செல்லூர் ராஜூ

ஆனால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட அந்த அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தும் இருந்தது.

இதனையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திளும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும்,  நாளை (ஜன.3ம் தேதி) முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்