‘நாளை நமதே’- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்…! வீடியோ வெளியிட்ட மநீம..!

Published by
லீனா

நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், ‘உயிரே, உறவே, தமிழே வணக்கம். நான் நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கிய காரணம் ஒன்று மருத்துவம், மற்றோன்று உங்கள் அன்பும், உங்கள் நல விருப்பமும் தான் என நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து உழைத்த, நம் மய்யத்தவருக்கு வாழ்த்துக்கள்.

நமது மய்யம் கிராம் சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நமது அடையாளமாக இல்லாமல், நடக்கவிருக்கும்  நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை, என்னுடைய வாழ்த்துக்களும் கூட. உங்கள் நடுவில் இருக்கும் கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, வேலையை பாருங்கள்.

எப்படி இந்த கோவிட் காலத்தில் நமது தோழர்கள் உயிர்பயமின்றி பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன், ஆனால் மிகவும் முன்ஜாக்கிரதையுடன்  செய்ய வேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிகவும் முக்கியம். நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலில் வெற்றியை ஈட்ட உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்புக்கு மிகவும் அவசியம். அதை செய்து காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம், நாளைநாமதே.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

36 minutes ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

2 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

3 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

3 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

3 hours ago