நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் நாளை கொண்டாடப்படும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாயகன் என்ற பெருமை பெற்ற நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில்,நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளில்,அனைவரும் கூடி வாழ்த்தலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“நாளை (7.11.2021) காலை முதல் மாலை வரை நாள் முழுவதும், ‘நம்மவர்’ டாக்டர் கமல் ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
காலை 10 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக்கொண்டு கண் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உறுப்புதான முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் ஆகியவை நம்மவரால் துவக்கி வைக்கப்படவுள்ளன. தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்திலும், ராஜ்கமல் திரைப்பட நிறுவன அலுவலகத்திலும் மதிய உணவாக சுமார் 1,500 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
மாலை 4 மணி முதல் தலைவர் அவர்கள், நம்மவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். 5 மணியளவில் சென்னை ஆலந்தூர் தொகுதி மற்றும் நம்மவர் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் நமது தலைவர் தனது சொந்த செலவில் குடிநீர்த் திட்டங்களை காணொலி மூலம் துவக்கிவைக்கிறார். அத்துடன் e-library, கமல் கலைக்கூடம் மற்றும் மய்யம் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.
நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் நம்மவரை, நாம் அனைவரும் நாள்கூடி வாழ்த்துவோம்,கொண்டாடுவோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…