பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் இன்று 23-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்த போதிலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.எனினும், பெட்ரோல்,டீசல் ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே, பெட்ரோல் டீசல் விலை சதத்தை விட்டு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.
இதனிடையே,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும்,இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தொடர்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார் எனவும்,
நடப்பு ஆண்டில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த ஒரே காரணத்துக்காக,தேர்தலுக்கு முன்னர் கடந்த ஆண்டு பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படும் வரியை குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு.ஆனால்,தேர்தல் முடிந்த பின்னர்,மடமடவென்று பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியது மத்திய அரசுதான் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…