சென்னை, காஞ்சிபுரம் உள்பட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 10 மாவடங்களில் இன்று காலை முதல் யாருக்கேனும் இருமல், சளி, மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 41 பேருக்கு தொடர்புள்ள சென்னை, கோவை வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். இவர்களில் காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…