Tsunami2004 [File Image]
தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு இதே தினத்தில் (டிசம்பர் 26)-ஆம் தேதி சுனாமி அலை ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி இந்தோனேசியாவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சுனாமி அலை ஏற்பட்டது.இந்த சுனாமியால் இந்தியாவில் அதிகம் பேரிழப்பை சந்தித்தது தமிழ்நாடுதான்.
குறிப்பாக இந்த சுனாமி பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த மறக்கமுடியாத நாளை ஆண்டு தோறும் கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு மேம்பாலத்தில் இருந்து மக்கள் அமைதி ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.
அதைப்போல, கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த சுனாமி தாக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கப்பலை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…