ஆண்டுகள் கடந்தும் நீங்காத சோகம்! சுனாமி 19-ஆம் ஆண்டு நினைவு தினம்!

Published by
பால முருகன்

தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு இதே தினத்தில் (டிசம்பர் 26)-ஆம் தேதி சுனாமி அலை ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி இந்தோனேசியாவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சுனாமி அலை ஏற்பட்டது.இந்த சுனாமியால் இந்தியாவில் அதிகம் பேரிழப்பை சந்தித்தது தமிழ்நாடுதான்.

குறிப்பாக இந்த சுனாமி பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக  நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த மறக்கமுடியாத நாளை ஆண்டு தோறும் கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு மேம்பாலத்தில் இருந்து மக்கள் அமைதி ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.

அதைப்போல, கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த சுனாமி தாக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கப்பலை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago