இன்று உலக வனவிலங்கு தினம்..!

உலகில் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், இயற்கை சமநிலை மாறாமல் இருக்கவும் மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” கடைபிடிக்கப்படுகிறது.
நம் உலகில் பல வகையான வனவிலங்குகளும் , செடிகொடிகளும் உள்ளன. வன உயிர்களால் மனிதர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் வன உயிர்களுக்கு மனிதர்களால் ஆபத்து மட்டுமே நிகழ்கிறது.மனிதகளின் நடவடிக்கைகளால் விலங்குகளும் , செடிகளும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது உள்ள உயிரினங்களில் சுமார் 25 விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாக என ஐ.நா.,
எச்சரித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஐ. நாவின் 68-வது பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையெடுத்து மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” அனுசரிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1973ஆம் ஆண்டு CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தான நாளை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” தேர்ந்தெடுக்கப்பட்டது.
மனிதர்களால் சட்ட விரோதமாக பல வன உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.சமீபத்திய ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வனப்பகுதிகள் கருகியது.மேலும் வனப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வன விலங்குகள் உயிரிழந்தன. எனவே காடுகளையும் , வன விலங்குகளையும் பாதுகாப்பது நம்முடைய ஒவ்வொருவரின் கடமை.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025