80 ஆண்டு போராட்டம்.! எனது வாழ்வின் திருப்திகாரமான நாள்.! திருவண்ணாமலை எஸ்பி நெகிழ்ச்சி.!

Published by
மணிகண்டன்

இன்று போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள். – பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற பின்னர் திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் நெகிழ்ச்சியாக கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நீண்ட வருடங்களாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு சமூகத்தினர் தீண்டாமை கடைபிடித்து வந்துள்ளனர். அதுவும் கடந்த 80 ஆண்டுகளாக இந்த வேதனைக்குரிய நடைமுறை இருந்து வந்துள்ளது.

தீண்டாமை : இதனை, அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொண்டார். இந்த முயற்சிகளில் மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆட்சியர் உத்தரவு : இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பெயரில், திருவண்ணமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பில் பட்டியலின மக்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். பல பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மாவட்ட எஸ்பி நெகிழ்ச்சி : இந்த நிகழ்வு குறித்து பேசிய திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், திருவண்னாமலை மாவட்டத்தில் கடந்த 80 ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழுப்பு தினத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு செய்ய வைத்தோம். இதன் மூலம் பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். உண்மையில் இன்று போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள். ‘ என மிகவும் நெகிழ்ச்சியாக அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago