ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷிற்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.
இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) எழுதுவதற்கு, கடைசி நாள் 13.4.2022 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக அத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இயங்குதளம் (Server) முடங்கி உள்ள காரணத்தினால் பலரும் விண்ணப்பிக்க இயலவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…