நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
அதே சமயம்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,இன்று நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் அனைத்தும் எந்த வித மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்றும்,இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 26 சனிக்கிழமை அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…