சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று மட்டும் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 26-ம் தேதி முதல் நேற்று இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1-ஆம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…