விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது.
இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய விஜய் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அவர்களுடைய பேனர் வைத்தது மட்டுமில்லாமல் அவர்களுடைய கொள்களைளையும் தான் கடைப்பிடிப்பேன், கட்சியின் கொள்கைகளும் அது தான் என விஜய் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது பாட்டிலும் மக்களுக்குக் கூறியிருக்கிறார். அதாவது பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் வழியில் நடக்க.. “நான் வரேன்” என விஜய் பேசியிருந்தார்.
விஜய் இப்படி பேசியது பாடல் மூலம் ஒலிக்கப்பட்ட நிலையில், தலைவர் விஜயின் உணர்வுப்பூர்வமான இந்த வார்த்தையைப் பார்த்து தொண்டர்கள் சற்று கண்கலங்கினார்கள். மேலும், அந்த பாடலில் வரிகள் மட்டும் இல்லாமல் பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் விஜய் கையைப்பிடித்து அழைத்து வருவதுபோல காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
விழுப்புரம் : த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில்…
மதுரை : மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்கள் வழியில் அரசியல்…
சென்னை : விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து…
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று வெற்றிகரமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த முதல் மாநில…
விழுப்புரம் : த.வெ.க மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு இந்த அளவுக்கு கூட்டம் வருமா? என பலரையும் வியக்க வைக்கும்…