தமிழகத்தில் நாளை (பிப்.27-ஆம் தேதி) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் நாளை (பிப். 27-ஆம் தேதி) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது எனவும் ,சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும்,போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் எனவும்,இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும்,பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது இருமல் அல்லது கொரோனா தொடர்பாக மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழல் காரணமாக ஜனவரி 23-ஆம் தேதி நடைப்பெறவிருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்த நிலையில்,நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…